நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் (31) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய முக்கிய சில மாகாணங்களான வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் மாலை நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும்.வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மி.மீ அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம்.