யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையிலிருந்து கடந்த 21 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லையான கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப் பகுதியிலிருந்த இந்திய கடற்படையினரால் நேற்று முன்தினம் ( 22) கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மீனவர்கள் நேற்று (23) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன் போது குறித்த இரு மீனவர்களையும் சென்னை புழல் சிறையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.