ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை மீண்டும் பெற்றது இந்தியா

Date:

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் 3 ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும். இதற்கான தேர்தல் ஐ.நா பொதுசபையில் நேற்று 15 நடைபெற்றது.
193 உறுப்பு நாடுகளில், தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க 184 நாடுகள் ஆதரவு அளித்து வாக்களித்தன. 97 வாக்குகள் பெற்றாலே, தலைமை தாங்க முடியும் என்ற நிலையில் அதிக அளவு பெரும்பான்மை பலத்துடன் இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் பதிவிட்ட ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்குவதற்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் தற்போதைய பொறுப்பு இந்த ஆண்டு முடிவடையவிருக்கும் நிலையில், மீண்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் தொடரவுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...