ஒத்திவைக்கப்பட்ட HNDE போட்டி பரீட்சையை 30 ஆம் திகதி நடத்த ஆளுநர் உத்தரவு

Date:

உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) பாடநெறியை பூர்த்தி செய்தவர்களில் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது.

முன்னதாக கேள்வித்தாள்கள் கசிந்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உயர் தேசிய டிப்ளமோ படித்தவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வுக்கு இம்மாதம் 30 ஆம்  திகதி(20.10.2021) போட்டி பரீட்சையை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பொதுச் சேவை ஆணை குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைளில் வெற்றிடமாக  உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் அடிப்படையில் தொடர்புடைய பரீட்சை நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக பரீட்சை எழுதிய பரீடசார்த்திகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த ஆளுநர் சிஐடிக்கு உத்தரவிட்டார்.
அந்த விசாரணையின் முடிவு, சம்பந்தப்பட்ட பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட தேர்வு எதிர் வரும் 30 ம் திகதி மீண்டும் நடைபெறும்.
 எந்தவொரு பரீட்சார்த்தியும் எதிர்வரும் 27.10.2021-க்குள் அனுமதி அட்டை கிடைக்கப்பெறவில்லை என்றால், அவர் கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துடன் மேலதிக  தகவல்களை  பெறலாம்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...