60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Date:

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை வழங்கியுள்ளது.
விசேடமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகள் செயலி ழந்த வைரஸைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுவதுடன், பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வைரஸ் குரோமோசோம்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு குரோமோசோம் தடுப்பூசியொன்றைச் செலுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர் களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் டெல்டா திரிபு தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்ப டுவதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...

மாற்றுத்திறனாளியான புத்தளத்தின் பிரபல கலைஞர் சலீம் கான் அவர்களுக்குப் பாராட்டு: வடமேல் மாகாண பாடல் போட்டியில் சாதனை!

புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம்....

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...