வெள்ளவாய எல்லவெல நீர் வீழ்ச்சியில் இன்று (20) நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
38 வயது தகப்பன், 14 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோர் இவ்வாறு வபாத்தாகி உள்ளார்கள்.இவர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இருந்து சுற்றுலா பயணம் வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்கின்ற அதேவேளையில் பொறுமையிழந்த நிலையில் பொதுமக்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வருவதையும் இதன் பின்னனியில் விபத்துக்கள் நடப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.எனவே பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்வதன் மூலம் விரும்பத்தகாத விடயங்களிலிருந்து நம்மையும், நாட்டையும் பாதுகாத்து கொள்ள முடியும்.