ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளவாய நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலி!

Date:

வெள்ளவாய எல்லவெல நீர் வீழ்ச்சியில் இன்று (20) நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

38 வயது தகப்பன், 14 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோர் இவ்வாறு வபாத்தாகி உள்ளார்கள்.இவர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இருந்து சுற்றுலா பயணம் வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்கின்ற அதேவேளையில் பொறுமையிழந்த நிலையில் பொதுமக்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வருவதையும் இதன் பின்னனியில் விபத்துக்கள் நடப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.எனவே பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்வதன் மூலம் விரும்பத்தகாத விடயங்களிலிருந்து நம்மையும், நாட்டையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...