கட்டாரில் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகைக்கு அனுமதி!

Date:

கத்தாரின் பள்ளிவாசல்களில் ஒக்டோபர் 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் நடத்த முடியும் என கட்டார் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கத்தாரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (Awqaf ) இந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது.

கத்தாரில் விதிக்கப்பட்டிருந்த கொவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு சாதாரண இயல்பு வாழ்க்கையை மீள கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 3ம் திகதி முதல் பின்வரும் விடயங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவ்காப் தெரிவித்துள்ளது.

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகைகளில் சமூக இடைவெளிகள் பின்பற்றத் தேவையில்லை
ஜும்ஆப் பிரசங்கத்தின் (ஜும்ஆ பயான்) போது மாத்திரம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,
பள்ளிவாசலில் அமைந்துள்ள மலசலகூடங்கள், வுழு செய்வதற்கான இடங்களைத் திறத்தல் (சனத்தொகை குறைந்த இடங்களில்)
அத்துடன் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புக்களை கொண்டு வருவதுடன், முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...