கட்டாரில் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகைக்கு அனுமதி!

Date:

கத்தாரின் பள்ளிவாசல்களில் ஒக்டோபர் 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் நடத்த முடியும் என கட்டார் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கத்தாரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (Awqaf ) இந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது.

கத்தாரில் விதிக்கப்பட்டிருந்த கொவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு சாதாரண இயல்பு வாழ்க்கையை மீள கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 3ம் திகதி முதல் பின்வரும் விடயங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவ்காப் தெரிவித்துள்ளது.

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகைகளில் சமூக இடைவெளிகள் பின்பற்றத் தேவையில்லை
ஜும்ஆப் பிரசங்கத்தின் (ஜும்ஆ பயான்) போது மாத்திரம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,
பள்ளிவாசலில் அமைந்துள்ள மலசலகூடங்கள், வுழு செய்வதற்கான இடங்களைத் திறத்தல் (சனத்தொகை குறைந்த இடங்களில்)
அத்துடன் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புக்களை கொண்டு வருவதுடன், முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...