குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

Date:

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மாத்தறை முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யு  திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 2 பிரதிக் காவல்துறை மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் 6  காவல் துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபராக பிரசாத் ரணசிங்க, அப் பதவியில் உள்ள நிலையில் காவல்துறை தலைமையகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.அத்துடன் காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா நுவன் வெதசிங்க அப் பதவிக்கு மேலதிகமாக மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் , பிரதிக் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...