கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உலகளாவிய ஒற்றுமை என்பது நாடுகளிடையே செயலில் காணப்படவில்லை மாறாக மோதல் உள்ள நாடுகள் மற்றும் பலவீனமான மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தி அடைந்த நாடுகள் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் ஏழை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி போதியளவு வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.