சுகாதார நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியும் – தொற்று நோயியல் பிரிவு!

Date:

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இன்று (1) அதிகாலை நாடு திறக்கப்பட்டுள்ளது.நாடு கட்டுப்பாட்டில் இருந்ததால் கொவிட்டின் தீவிர போக்கை கட்டுப்படுத்த முடிந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் (29) திகதிக்கான அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது.அதன்படி நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் குறைவடைந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 923 விருந்து நேற்று (30) 912 ஆக குறைவடைந்துள்ளது.

இங்கே இரண்டாவது அட்டவணையிலிருந்து ஊரடங்கு உத்தரவு காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை (செப்டம்பர் 28 லிருந்து) கணிசமாக குறைவடைந்து வரும் போக்கை காணமுடிந்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் பலரும் சுகாதார நடைமுறைகளை பேணுவதாகும்.இந்த நிலை மேலும் தொடர்ந்தால் கொவிட்டின் தீவிர தாக்கத்தை மேலும் குறைக்கலாம் என தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.அத்தோடு இந்த நிலையை கட்டுப்படுத்த மற்றுமொரு காரணியாக நாடு பூராகவும் செயல்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி நடவடிக்கை பிரதானமானதாகும்.அதனடிப்படையில் இதுவரை 26,171,815 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த அறிக்கைகள் காட்டுகின்ற படி சாதகமான பிரதிபலன்களை அடிப்படையாக வைத்து நாட்டு மக்கள் இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதையே நாமும் வலியுறுத்துகின்றோம். சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பேணுவதனூடாக நம்மையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம்.

 

 

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...