ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்து பயணம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) ஸ்கொட்லாந்து பயணமானார்.ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள ” Cop: 26 ” ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணமாகியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எவ்வாறு முகம்கொடுத்து செயற்படுவது தொடர்பாக நாடுகள் திட்டமிடும்  ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகள் உலகத் தலைவர்களின்  மாநாட்டுக்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தினை தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் என்று நடைபெறுகின்ற இம் மாநாட்டில் 197 நாடுகளின் அரசத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...