ஜெய்ஸ்வாலின் அதிரடியால் வீழ்ந்தது சென்னை சுப்பர் கிங்ஸ்!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 07விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்வாட் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ராகுல் தெவாடியா 39 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 17.3 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷர்துல் தாகூர் 30ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...