பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும்!

Date:

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை திறந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டன.பல்கலைக்கழக மாணவர்களில் 11 வீதமானவர்கள் இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் இன்று வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...