பால்மா உற்பத்தியாளர்களின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை!

Date:

ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படும் தொகை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் சுசந்த குமார நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார் .

குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வெவ்வேறு பகுதிகளில் மாறுப்பட்ட விலைகளில் பால் கொள்வனவு செய்யப்படுவதாகவும், நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு மில்கோ மற்றும் பெல்வத்த ஆகிய பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுதாக நேற்று அறிவித்திருந்தது.

இதற்கமைய உள்நாட்டு பால் பால் உற்பத்தியாளர்களுக்காக செலுத்தப்படும் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...