போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரிலிருந்து வெளியேறியது நடப்பு சம்பியன் மும்பை!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக இஷான் கிஷான் 84 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 52 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணி சார்பில் அதிகபடியாக அணித்தலைவர் மனீஷ் பாண்டே 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 39 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றாலும் ப்ளே ஓஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...