போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரிலிருந்து வெளியேறியது நடப்பு சம்பியன் மும்பை!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக இஷான் கிஷான் 84 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 52 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணி சார்பில் அதிகபடியாக அணித்தலைவர் மனீஷ் பாண்டே 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 39 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றாலும் ப்ளே ஓஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...