மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

Date:

மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.16,000 பேருந்துகள் மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டு சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ( 31) மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 50% பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.கடந்த காலத்தை போலவே தனியார் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஒரு வருடகாலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழமையான நேரங்களுக்கு அமைய ( நாளை 01) முதல் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன . எவ்வாறாயினும் அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் எனவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு பொதுமக்கள் வழியுறுதிப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...