விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவிற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!

Date:

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான ஆசிய பசுபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் சுற்றாடல் அதிகாரிகளின் நான்காவது கூட்டத்தொடரின் தலைமைத்துவ பதவிக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவாகியுள்ளார்.

கொரியா நாட்டின் சுவோன் நகரில் இன்று (06) இடம்பெற்ற கூட்டத் தொடரில் அவர் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அனில் ஜாசிங்க அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 5ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் பணியகத்தின் தலைவராக அந்த கூட்ட தொடரில் பங்கேற்பார்.ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 47 உறுப்பு நாடுகள் மற்றும் சுற்றாடல் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் சுற்றாடல் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...