60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Date:

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை வழங்கியுள்ளது.
விசேடமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகள் செயலி ழந்த வைரஸைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுவதுடன், பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வைரஸ் குரோமோசோம்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு குரோமோசோம் தடுப்பூசியொன்றைச் செலுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர் களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் டெல்டா திரிபு தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்ப டுவதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...