IPL 2021 – இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி!

Date:

டெல்லி கெபிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட டெல்லி அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டெல்லி அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பிரிதிவ் ஷா 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சிம்ரொன் ஹெட்மயர் 37 ஓட்டங்களையும், ரிஷப் பான்ட் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

சென்னை அணி சார்பில் ருதுராஜ் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதேபோல்,ரொபின் உத்தப்பா 60 ஓட்டங்களையும் அணித்தலைவர் மகேந்திர சிங் தோணி ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டொம் கரன் 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...