T20 Highlights: ஆசிப் அலியின் அதிரடியில் ஆப்கானை வீழ்த்தியது பாகிஸ்தான்; ஹெட்ரிக் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைகிறது!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 24 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது .நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஹஸரதுல்லாஹ் செசாய் ஓட்டம் ஏதுமின்றி வெளியேறினார், முஹம்மத் செதாட் 8 , ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 10, அஸ்கர் ஆப்கான் 10, கரீம் ஜன்னத் 15 , நஜிபுல்லாஹ் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது முஹம்மத் நபி 35(32) , குல்பதின் நயீப் 35(25) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி 1 ( 22), ஹரீஸ் ரொவ்ப் 1,(37), ஹசன் அலி 1 ( 38) , சதாப் கான் 1 ( 22) ,இமாத் வஸீம் 2 ( 25) வீதம் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

148 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அதிக பட்சமாக அணித் தலைவர் பாபர் அசாம் 51(47) , பக்ஹர் சமான் 30 ( 25) , ஹபீஸ் 10 (10) , மலீக் 19 ( 15) , ரிஸ்வான் 8 (10) , ஆட்டமிழக்காமல் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஆசிப் அலி 25 (7) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரசித் தான் 2 (26) , முஜிபுர் ரஹ்மான் 1/14 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த அதிரடி ஆட்டக்காரரர் ஆஸிப் அலி தெரிவானார்.

இந்த போட்டியுடன் பாகிஸ்தான் ஹெட்ரிக் வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது.இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.பாகிஸ்தானுக்கு மீதமுள்ள போட்டி நமீபியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுடனாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...