ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 22 வது போட்டியில் இன்று (28) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி அடைந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
155 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 65 , ஆரோன் பின்ச் 37 , ஸ்மித் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்கள்.பந்து வீச்சில் எடம் சாம்பா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சரித் அசலஙக 35 , குசல் ஜனித் பெரேரா 35, பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பெற்ற எடம் சாம்பா தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை அணி இப் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.