T20 Highlights: ஆஸியிடம் வீழ்ந்தது இலங்கை; 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 22 வது போட்டியில் இன்று (28) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி அடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

155 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 65 , ஆரோன் பின்ச் 37 , ஸ்மித் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்கள்.பந்து வீச்சில் எடம் சாம்பா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சரித் அசலஙக 35 , குசல் ஜனித் பெரேரா 35, பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பெற்ற எடம் சாம்பா தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி இப் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...