T20 Highlights : ” சுப்பர் 12″ சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்து வைத்தது அவுஸ்திரேலியா!

Date:

அப்ரா அன்ஸார்.

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் ” சுப்பர் 12″ சுற்று போட்டிகள் இன்றைய தினம் (23) ஆரம்பமானது. முதலாவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் அபூதாபி ஷெய்க் ஸெய்ட் மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 35 ஓட்டங்களை 34 பந்துகளில் பெற்றுக் கொண்டார்.தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுகளையும் ,கசிசோ ரபாடா , கேசவ் மகராஜ் மற்றும் தப்ரிஸ் ஷம்ஸி தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சில் ஜோஜ் ஹெசில்வூட்( 2/19), மற்றும் மிச்சல் ஸ்டார்க் ( 2/31) , எடன் ஜாம்பாவும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இரண்டாவது போட்டியாக தற்போது இங்கிலாந்து மற்றும் மேற்கந்திய தீவுகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...