ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 25 வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின .இன்றைய (30) போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தும் நிசங்க 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டப்ரைஸ் ஷம்ஸி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
143 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் குயின்டன் டி.கொக் 12 (10), ஹென்ட்ரிக்ஸ் 11 (12), வன் டீர் துஷன் 16 (11) அணித் தலைவர் பவுமா 46 (46) , டேவிட் மில்லர் 20 (8) , ரபாடா 13 ( 7) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.இலங்கை அணியின் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 3 (20) , துஷ்மந்த சாமீர 2 ( 27) விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியுடன் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு செல்லும் வாய்பை பெற்றுள்ளது.இலங்கை அணி இத் தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.