T20 Highlights: டேவிட் மில்லரின் அதிரடியில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 25 வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின .இன்றைய (30) போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தும் நிசங்க 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டப்ரைஸ் ஷம்ஸி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

143 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் குயின்டன் டி.கொக் 12 (10), ஹென்ட்ரிக்ஸ் 11 (12), வன் டீர் துஷன் 16 (11) அணித் தலைவர் பவுமா 46 (46) , டேவிட் மில்லர் 20 (8) , ரபாடா 13 ( 7) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.இலங்கை அணியின் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 3 (20) , துஷ்மந்த சாமீர 2 ( 27) விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியுடன் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு செல்லும் வாய்பை பெற்றுள்ளது.இலங்கை அணி இத் தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...