T20 Highlights: ஆஸியிடம் வீழ்ந்தது இலங்கை; 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 22 வது போட்டியில் இன்று (28) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி அடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

155 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 65 , ஆரோன் பின்ச் 37 , ஸ்மித் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்கள்.பந்து வீச்சில் எடம் சாம்பா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சரித் அசலஙக 35 , குசல் ஜனித் பெரேரா 35, பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பெற்ற எடம் சாம்பா தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி இப் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...