T20 Updates: ஆடுகளத்தில் குயின்டன் டீ கொக் இன்று மண்டியிட்டார்!

Date:

ஐ.சி சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் அனைத்து போட்டிகளும் ஆரம்பிப்பதற்கு முன்னர் மைதானத்தில் மண்டியிட்டும் , வேறு முறைகளிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

கடந்த மேற்கந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.எனினும் மண்டியிட மறுத்த டீ கொக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

இவை கடந்த சில தினங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று அதற்கு கொக் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

இன்றைய தினம் இலங்கை அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் குயின்டன் டீ கொக் சக வீரர்களுடன் இணைந்து நிற வெறிக்கு எதிராக முழந்தாளிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...