அளுத்கம -மத்துகம, அகலவத்த ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், நாளைக் (06) காலை 8 மணிமுதல் அமுலாகும் வகையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பேருவளை, அளுத்கம, தர்காநகர், பெந்தர, களுவாமோதர, ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும்.
இதனை விட, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளிலும் 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் மறுநாள் பிற்பகல் 2 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.