சவால்களுக்கு மத்தியில் முன்மாதிரியான ஆட்சி தொடரும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

Date:

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து  நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

இந்த முரண்பாட்டை தணிக்கும் வகையில் இராணுவ ஜெனரல் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் பிரதமர் இம்ரான் கான் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.ஐ.எஸ்.ஐ தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்த நிலையில், அவரின் பதவிக்காலம் முடிந்ததால், நதீம் அகமது என்பவர் தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்திருந்தது

இருப்பினும் நதீம் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தடுத்து வைத்தது இதனால் இம்ரான் – இராணுவ தளபதி கமர் ஜாவேதுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் பதவி உயர்வு போன்ற அறிவிப்புகளை இம்ரான் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...