நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி பள்ளிவாசல்களில் சமய நிகழ்ச்சிகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

Date:

2021 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் தொடர்பான சமய நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார வழி முறைகளின் கீழ் 50 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள் இன்று 15 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு இணைப்பாளராக இருக்கின்ற அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ளுமாறும், இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை வகுப் சபை வெளியிட உள்ளதாகவும் கலாநிதி ஹசன் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

அன்பு நடமாடிய கலைக்கூடம் இன்று மௌனமானது!

-முஹம்மத் பகீஹுத்தீன் வெலிகமையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல நூலாசிரியரும் எழுத்தாளருமான,...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு...

ஈரானால் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிப் முனீர்; சிறைக்குள் வாடி வதங்கும் ஜனநாயகம், இம்ரான் கான்

-லத்தீப் பாரூக் பாகிஸ்தானில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர் இம்ரான் கான்...

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 47.3% ஆகக் குறைவு!

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள...