வடமாகாண முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி முஸ்லிம் லீக் வாலிப முன்னணி நடத்தும் கட்டுரைப் போட்டி

Date:

கட்டுரைப் போட்டி.

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முப்பத்தொரு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், தமிழ் மொழி மூலம் கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்துகிறது. இக்கட்டுரைப் போட்டியில் வயதுக் கட்டுப்பாடின்றி, ஆண், பெண் இருபாலரும் பங்குபற்றலாம்.

கட்டுரையின் தலைப்பு *” பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அவல நிலையும் எதிர்காலமும்”*
வெற்றி பெறும் ஆக்கங்களுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
1ம் இடம் 15 000/- ரூபா.
2ம் இடம் 10 000/- ரூபா.
3ம் இடம் 5 000/- ரூபா.
போட்டியில் பங்குபற்றும் ஏனையோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கட்டுரைகள் 1500 சொற்களுக்கு மேற்படாமல், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் கடந்த கால கஸ்டங்கள், நிகழ் கால பிரச்சனைகள், எதிர் கால தீர்வுகள் பற்றியதாக எழுதப்பட்டு,’டைப் செட்டிங்’ செய்யப்பட்டு
2021 நவம்பர் 15ம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக, அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: acumlyfadmn@gmail.com
தபால் முகவரி: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இல: KG 7, எல்விடிகல மாடி வீட்டுத் தொகுதி,கொழும்பு 8.
(All Ceylon Union of Muslim League Youth Fronts, No: KG 7 , Elvitigala Flats, Colombo 8).
மேலதிக விபரங்களுக்கு 011267 4006, 077 227 5163 எனும் இலக்கங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...