இங்கிலாந்தில் வீசிய கடும் புயல்; மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு!

Date:

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தில் “அர்வன்” என பெயரிடப்பட்ட புயல் நேற்று (27) கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்றும் பனிப்புயலும் சேர்ந்து தாக்கியதால் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது, பெரிய லாரி ஒன்றும் விழுந்துள்ளது.

புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மரம் விழுந்ததிலும், பனியில் சிக்கியும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மின்சாரம் தடைபட்டதால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருளில் தவிக்கின்றனர். சாலைகளில் விழுந்த கிடைக்கும் மரங்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://amp.theguardian.com/uk-news/2021/nov/27/storm-arwen-two-people-killed-after-winds-of-almost-100mph-hit-uk&ved=2ahUKEwjG54yV-7n0AhXUTWwGHV-nDO8QFnoECAQQAQ&usg=AOvVaw3iaSydTC__WtmATwNVab4O&ampcf=1

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...