எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பதை நிதி அமைச்சர் தீர்மானிப்பார்- உதய கம்மன்பில!

Date:

எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பதை  நிதி அமைச்சர் தீர்மானிப்பார் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தற்போது பெரும் நெருக்கடியில் இருப்பதால் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதை போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு இருந்தபோதிலும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது என்றார்.அத்தோடு தற்காலத்தில் விவசாயம் செய்யும் மக்கள் மற்றும் மீன்பிடி துறையினர் இல்லாத பகுதிகளுக்கு மண்ணென்னெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...