ஐக்கிய இளைஞர் சக்தியின்  அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Date:

எம்.எஸ்.எம்.ஸாகிர்

ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று

நேற்று (02) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட செயலாளரும்,அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி கல்வி, ஊடகம், விளையாட்டு, கலாசாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றையும் றிஸ்கான் முகம்மட், தவிசாளரிடம் கையளித்ததுடன் எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இச் செயற்றிட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடினார்.இந் நிகழ்வில், பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆஷிக் சுபையிரும் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரிட்டனுடனான வணிகக் குழுவின் புதிய தலைவராக அமீனா ஜியாவுதீன் தெரிவு!

நார்போக் புட்ஸ் (Norfolk Foods) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அமீனா ஜியாவுதீன்,...

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய்...

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நீர் பாதுகாப்பு என்பதில் எந்த சமரசமும் இல்லை – ‘சிவப்புக் கோடு’ என அதிரடி பிரகடனம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்து, வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...