கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்களுக்கான விசேட வாய்ப்பு!

Date:

சீஷெல்ஸ் நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தகுதியான 17 ஆசிரியர்களை தெரிவு செய்து தருமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 17  ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கையில் உள்ள சீசெல்ஸ் துணைத் தூதரகம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

கணித பாடத்திற்கு ஏழு வெற்றிடங்களும், விஞ்ஞானப் பாடத்திற்கு 10 வெற்றிடங்களும் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...