கம்பஹா மாவட்டத்தில் பத்திக் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

Date:

(ரிஹ்மி ஹக்கீம்)

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியிலுள்ள வானலுவாவ பிரதேசத்தில் பத்திக் பயிற்சி நிலையம் ஒன்று நேற்றைய தினம் (09) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டமானது தொம்பே பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜயதிஸ்ஸவின் பூரண மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற பிரதேசத்தை சேர்ந்த 25 பெண்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, தொம்பே பிரதேச சபை தவிசாளர் பியசேன காரியப்பெரும உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...