காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி!

Date:

காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு பலப்பிட்டிய நகரில் காலி வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி விபத்தின் பின்னர் தப்பியோடியுள்ளார். மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்தில் பலபிடிய வெலிதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நிஜாம் மாஸ்டர் அவர்களே உயிரிழந்துள்ளார். அன்னாரது சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் PCR பெறுபேறு வரும்வரையில் வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...