காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி!

Date:

காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு பலப்பிட்டிய நகரில் காலி வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி விபத்தின் பின்னர் தப்பியோடியுள்ளார். மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்தில் பலபிடிய வெலிதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நிஜாம் மாஸ்டர் அவர்களே உயிரிழந்துள்ளார். அன்னாரது சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் PCR பெறுபேறு வரும்வரையில் வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...