கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு நாளை (13) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி நாளை 13 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்களாக,

கொழும்பு 04,05,06,07 ,08

கோட்டை ,கடுவலை மாநாகர சபை அதிகாரப் பிரிவு

மஹரகம , பொரலஸ்கமுவ நகர சபை அதிகார பிரிவு.

அம்பத்தலையிலிருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...