கொழும்பு-கண்டி புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

Date:

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதிப்படைந்ததால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவைகள் இன்று (22) மீண்டும் ஆரம்பமாகிறது.

நாட்டில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மலையக புகையிரத பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளை தொடக்கம் நானுஓயா வரையில் பல இடங்களில் இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்ததாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அவை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும். ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இதன் காரணமாக இன்று (22)தொடக்கம் ரயில் சேவையை மேற்கொள்ள முடியும் என்றும் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...