மூன்றாவது நாளாக அருட் தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

Date:

வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (22) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது தடவையாக முன்னிலையான அருட்தந்தை சிறில் காமினியிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.இதற்கமையவே இந்த வாக்குமூலம் அருட்தந்தை சிறில் காமினியிடம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...