சமையல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

Date:

எதிர்வரும் 6 நாட்களுக்குள் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படுமென லிட்ரோ நிறுவனம் இன்று (19) அறிவித்துள்ளது.

அரசு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த நிலை சீராகும் எனவும் சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எந்த குறைபாடும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 6 நாட்களுக்குள் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் குறித்த தொகையை வழங்கக் கூடியதாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை...

சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத்...

இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்

‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய...