பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்!

Date:

பன்னிப்பிட்டிய – கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.எனினும் இந்த சம்பவத்தில் வீட்டில் உள்ளவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர் . நவம்பர் 16 ஆம் திகதி இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் , விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிய வந்தது, நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...