மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Date:

அமீர் ஹூசைன்

மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார். அஷ்ஷேக் அக்ரம் ரஸ்ஸாக் (நளீமியால்) எழுதப்பட்ட ‘ ‘இஸ்லாமிய துஷ்டிகோணயென் விவித ஜனகொடஸ் அதர மித்ரத்வய’ என்ற சிங்கள மொழி மூலமான நூல் வெளியீட்டில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இஸ்லாம் எனும் கயிற்றை இறுக்கமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் வழி தவற மாட்டீர்கள் என்று முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுக்கும் இஸ்லாம் அன்பு, காருண்யம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உண்ணதமான பண்புகளை முழு மனித சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் சிறந்த மார்க்கம் ஆகும் என்றும் அவர் கூறினார். அவரது கண்ணில் சத்திர சிகிச்சை செய்து ஓய்வாக இருந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றினார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...