மூன்றாவது நாளாக அருட் தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

Date:

வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (22) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது தடவையாக முன்னிலையான அருட்தந்தை சிறில் காமினியிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.இதற்கமையவே இந்த வாக்குமூலம் அருட்தந்தை சிறில் காமினியிடம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...