நாட்டில் நேற்று (08) 17 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,192 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொவிட் தொற்று உறுதியான மேலும் 538 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 546,473 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 10,397 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை கொவிட் தொற்றால் 6,689 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.இதன்படி கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.