வெலிசர விபத்து தொடர்பில் சிறுவன் உட்பட தந்தை கைது!

Date:

இன்று காலை ( 04) வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தின் மற்றுமொரு சிசிடிவி காணொளி கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் வாகானம் முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

16 வயதுடைய சிறுவனே இவ்வாறு அதிசொகுசு வாகனத்தை செலுத்தியுள்ளது .வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சிறுவன் மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹபோக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...