இங்கிலாந்தில் வீசிய கடும் புயல்; மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு!

Date:

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தில் “அர்வன்” என பெயரிடப்பட்ட புயல் நேற்று (27) கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்றும் பனிப்புயலும் சேர்ந்து தாக்கியதால் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது, பெரிய லாரி ஒன்றும் விழுந்துள்ளது.

புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மரம் விழுந்ததிலும், பனியில் சிக்கியும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மின்சாரம் தடைபட்டதால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருளில் தவிக்கின்றனர். சாலைகளில் விழுந்த கிடைக்கும் மரங்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://amp.theguardian.com/uk-news/2021/nov/27/storm-arwen-two-people-killed-after-winds-of-almost-100mph-hit-uk&ved=2ahUKEwjG54yV-7n0AhXUTWwGHV-nDO8QFnoECAQQAQ&usg=AOvVaw3iaSydTC__WtmATwNVab4O&ampcf=1

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...