இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் க்லென் ப்ளிப்ஸ் 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 2/25 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
154 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் கே.எல் ராகுல் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சவுத்தி 3/16 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.