எதிர்வரும் இரு தினங்களுக்கு கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்!

Date:

எதிர்வரும் தினங்களில் கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி இம் மாதத்தின் 13 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்களாக,

கொழும்பு 04,05,06,07 ,08

கோட்டை ,கடுவலை மாநாகர சபை அதிகாரப் பிரிவு

மஹரகம , பொரலஸ்கமுவ நகர சபை அதிகார பிரிவு.

அம்பத்தலையிலிருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...