எதிர்வரும் தினங்களில் கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி இம் மாதத்தின் 13 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.
நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்களாக,
கொழும்பு 04,05,06,07 ,08
கோட்டை ,கடுவலை மாநாகர சபை அதிகாரப் பிரிவு
மஹரகம , பொரலஸ்கமுவ நகர சபை அதிகார பிரிவு.
அம்பத்தலையிலிருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.