கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்களுக்கான விசேட வாய்ப்பு!

Date:

சீஷெல்ஸ் நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தகுதியான 17 ஆசிரியர்களை தெரிவு செய்து தருமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 17  ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கையில் உள்ள சீசெல்ஸ் துணைத் தூதரகம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

கணித பாடத்திற்கு ஏழு வெற்றிடங்களும், விஞ்ஞானப் பாடத்திற்கு 10 வெற்றிடங்களும் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...