கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும் -போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Date:

கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா பஸ் டிப்போ தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,

இது எனது தந்தையினால் 1994.07.27 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .ஆரம்பிக்கப்பட்டு 27 வருடங்கள் கடந்தும் இன்னும் உப டிப்போவாகவே காணப்படுகின்றது .கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முதலாவது உபசாலை இதுவாகும்.கிண்ணியாவிற்கு பின்னர்உபசாலைகளாக ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி, களுவாஞ்சிகுடி உபசாலைகள் தற்பொழுது டிப்போவாக தரமுயர்த்தப்பட்டுள்ளன எனவே இதை டிப்போவாக தரமுயர்த்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,

அரசின் செலவீனங்களை குறைக்கும் முகமாக அருகருகே உள்ள உப பஸ் டிப்போக்களை மூடுகின்ற கொள்கையில் அரசு இருந்தாலும் கிண்ணியா உப பஸ் டிப்போ பிரதான பஸ் டிப்போவில் இருந்து 20 km க்கு அப்பால் உள்ளதால் இது டிப்போவாக தரமுயர்த்தப்படும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...